நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு அறிமுக கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக கோவையில் உள்ள பீளமேடு, சிங்காநல்லூர், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள தூய மைக்கேல் பேராலயம் சென்று, கோவை மறை மாவட்ட பேராயர் தாமஸ் அக்குவினாஸ்-ஐ தேவாலயத்தில் சந்தித்து ஆதரவு […]

Moscow terror attack ரஷ்யாவில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை அரங்கு கூடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சுமார் 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல். அந்த நாட்டில் அண்மைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக பயங்கரமான தாக்குதலில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் இந்தியன் ரயில்வே புதிய முறையை ஜூலையில் அறிமுகம் செய்கிறது. இனி ரயிலின் பான்ட்ரிகார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது. உணவு தயாரிப்பு ஒப்பந்தம் ஏஜென்சிகளுக்கு வழங்கப்படும். ஏஜென்சி ரயில் நிலையத்தில் அடிப்படை சமையலறையை தொடங்குவர். இதன்படி, வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ரயில்களில் உள்ள பேண்ட்ரி கார் பெட்டிகளில் பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இந்த மாற்றத்துக்குப் பிறகு பேண்ட்ரி காரில் தண்ணீரை சூடாக்கலாம் அல்லது தேநீர் […]

தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆப., தலைமையில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணையம் ஆலோசித்தது.

ராமாயணத்தின் முக்கிய பகுதி பால காண்டம்… அந்த பாலகண்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் விஸ்வாமித்திரர். பதினாறு வயது கூட நிரம்பாத பாலகனாக இருந்த ராமனை தென்தமிழகத்தின் விஜயாபதிக்கு மகரிஷி அழைத்துவர முக்கிய காரணம் உண்டு. பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் யார்…? புண்ணிய பூமி பாரத நாட்டில் தோன்றிய மகிரிஷிகளில் தனித்துவமும் நீண்ட வரலாற்று பெருமையும் உடையவர் “பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் ”. பேரரசில் சிகரமென திகழ்ந்தவர் கடும்தவத்தினால் மகரிஷிகளில் சிகரமாக விளங்கினார். பிரம்மரிஷி […]

இமயமலை சாரலில் ஓடிவரும் கௌசிக நதி மிகவும் புனிதமானது, அழகானது. இந்த நதிக்கரையில் தவ வாழ்வை மேற்கொண்ட விஸ்வாமித்திரர் தாய்மையின் அரவணைப்பில் இருப்பதை போல உணர்ந்தார். அதனாலேயே பலகாலம் இந் நதிக்கரையில் தவமிருந்தார். அப்போது அவரது மனதில் சித்தாஸ்ரம் பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நியமன விரத வழிபாடுகளை பற்றியும் ஆழ்ந்து சிந்தனை செய்தது. தவபெரும் செல்வரான விஸ்வாமித்திரர் தவ ஆற்றல் மிகுந்துள்ள இப்புண்ணிய பூமிக்கு வர முடிவு செய்தார். […]