மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக L.முருகன் பொறுப்பேற்றார்

L Murugan

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார்.

ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி ஊரக மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை முடிவு இதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டார். அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜூ, அமைச்சகம் மற்றும்  ஊடகப் பிரிவுகளைச் சேர்ந்த இதர உயர் அதிகாரிகள் டாக்டர் முருகனை வரவேற்றனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மத்திய மின்துறை அமைச்சராக மனோகர் லால் பொறுப்பேற்றார்

Tue Jun 11 , 2024
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மனோகர் லால் இன்று பொறுப்பேற்று கொண்டார். மின்துறை அமைச்சகத்தின் செயலாளர்  பங்கஜ் அகர்வால், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர். முன்னாள் மின்துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் அவரை அன்புடன் வரவேற்றார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்திய அமைச்சருக்கு மின்சார அமைச்சகத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் […]
Manohar La

You May Like