மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றார்

Ashwini Vaishnaw

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏழைகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார். 3 கோடி கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கான நேற்றைய அமைச்சரவை முடிவை மீண்டும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசின் முதல் நாளில் அமைச்சரவை எடுத்த முதல் முடிவு ஏழைகளுக்கு அதிகாரமளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களுக்கு அரசு தொடர்ந்து சேவை செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகப் பிரதமருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். வைஷ்ணவை அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஊடகப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

4-வது முறையாக முதலமைச்சரானார் சந்திரபாபு நாயுடு; பிரதமர் மோடி வாழ்த்து

Wed Jun 12 , 2024
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீரிடம் கூட்டணி கட்சியினர் கடிதம் வழங்கினர். இதனை தொடர்ந்து […]

You May Like