சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது.
தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது.
இந்நிலையில், இன்று (மார்ச் 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.
இதுவரை தங்கள் விலை இவ்வளவு உயர்ந்தது இல்லை. எனினும் இதனால் தங்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.