வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் இருக்கும்.
மேலும் மத்திய வங்கிகளின் கொள்முதலை பொருத்து, அமெரிக்கா அதிகத் தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது. பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் போது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தங்க விலைகளைப் பாதிக்கும். இருப்பினும், விலைமதிப்பற்ற உலோகப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக அவை அரிதாக விற்கப்படும். எனவே, இந்தக் காரணிகள் இன்று இந்தியாவில் தங்க விலையைப் பாதிக்கின்றன.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.