தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழும்ப தொடங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் […]

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத்திட்டத்தின் தேவை மற்றும் நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் இந்தியாவிற்கான பி.டெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திட்டங்களிலிருந்து முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனம் ஒன்றின் பாடத்திட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பி.டெக் […]

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் என்று […]

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில […]

ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால், தேர்தல் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை ஏப்ரல் 15 முதல் […]

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 19 […]

சார் – பதிவாளர்கள், தகுந்த காரணம் இல்லாமல் பத்திரங்களை நிலுவையில் வைப்பதை தடுக்கும் வகையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி, 1. பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் – பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, ‘ஸ்டார் 2.0 ‘மென்பொருளில், ‘டிராப் டவுன் பாக்ஸ்’ என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும் 2. ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், […]

மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் […]

வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் […]

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள், கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 6 முறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு முறையும் என மொத்தம் 7 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி அமைச்சரவைகளில் […]