போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்- பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் போராட்டம்

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் : மீனவர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 நிவாரணம்

Sat Apr 13 , 2024
ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால், தேர்தல் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை ஏப்ரல் 15 முதல் […]
Fishing Boat

You May Like