நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதில், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் சேகர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் கட்சியினருடன் ஆலோசித்து வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவார் என்று இன்று ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். அதன் படி, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக கூட்டணியில் எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டியிடுகிறார்.