கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட (முள்ளூர் துறை, ராமன்துறை, இணையம், இணையம் புத்தன்துறை, ஹெலன் காலனி,மிடலாம் & மேல் மிடலாம்) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மிடலாம் கடலோர மீனவ கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றியம் (11-நிர்வாகிகள்) மற்றும் 7-மீனவ கிராமங்களில் (77-நிர்வாகிகள்) தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.