அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்காலிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை துவக்கம்: 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு

Thu Apr 18 , 2024
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நியாயமான, அமைதியான, எளிதில் அணுகக்கூடிய, அனைவரும் பங்கேற்கும் சுதந்திரமான தேர்தலுக்கு ஆணையம் உறுதி பூண்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முதல் கட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார்,  சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் […]

You May Like