தென்காசியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பலூன் பறக்க விட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தென்காசியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் நாள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்விற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஏ.ஆ.சிவக்குமார், இ.சாமத்துரை, ஆ.கலைச்செல்வி, டேவிட் ஜெயசிங், தென்காசி கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து: ஜெர்மனி தூதருக்கு இந்திய அரசு கண்டனம்

Sat Mar 23 , 2024
கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். இந்த […]
Indian government German ambassador

You May Like