தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று Sekhmet கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்லோன் ராஜ், மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரும் மதுபான விடுதி ஊழியர்கள். இந்த விவகாரத்தில் மதுபான விடுதி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளர் அசோக்குமார் போலீசார் தேடி வருகின்றனர்.