மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் பணியாளர்கள் இது வரை பெற்று வந்த 294 ரூபாய் 319 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு தமிழ்நாட்டில் எவ்வளவு?
![100 நாள் வேலை](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/2-4.png)