வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை வசதிகளைப் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024 மார்ச் 28-29 தேதிகளில் பார்வையிட்டார். இந்தப் பயணத்தின்போது, ஓகாவில் மிதவை விமானப் பராமரிப்புப் பிரிவின் உள்கட்டமைப்பை 2024, மார்ச் 28 அன்று அவர் தொடங்கி வைத்தார். வேராவல் இனாஸ் கிராமத்தில் கடலோர காவல்படையில் திருமணமாகாதோர் மற்றும் திருமணமானோருக்கான தங்குமிடங்களை திருமதி காயத்ரி அரமானே 2024, மார்ச் 29 அன்று திறந்துவைத்தார். ஓக்காவில் […]

இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார் (ஒரு சிறப்பு மாசு கட்டுப்பாட்டு கப்பல்), மூன்று நாள் பயணமாக நேற்று பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவைச் சென்றடைந்தது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைத் தவிர, ஆசியான் பிராந்தியத்தில் கடல் மாசுபாடு குறித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பு […]